ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு... அதிரடி அறிவிப்பு வொளியிட்ட ரயில்வே நிர்வாகம்...
கொரோனாவால் உயிரிழந்த ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக உயிரிழந்த 2,800 ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினருக்கு பணி வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை அதிகாரிகள், கடைநிலை ஊழியர்கள் என 3,256 ரயில்வே பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
பணியில் இருக்கும் போதே பலியானதால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்க இரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி முதலில் 2,800 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு பணியை வழங்குவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் குழந்தைகளாக இருப்பவர்கள் 18 வயதை கடந்ததும் அவர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அடுத்த 4 மாதத்திற்குள் அனைவருக்கும் "டி" பிரிவில் கடைநிலை பணி வழங்கப்படும் என்று இரயில்வே நர்வாகம் அறிவித்துள்ளது.
Comments
Post a Comment